Wednesday, September 24, 2014

ஊட்டத்தூர் சுத்தரத்தினேஸ்வரர் திருக்கோயில் வீடியோ


வார வைப்புத் தலம் ஊட்டத்தூர் சுத்தரத்தினேஸ்வரர் திருக்கோயில்

வார வைப்புத் தலம்
ஊட்டத்தூர் சுத்தரத்தினேஸ்வரர் திருக்கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):ஊற்றத்தூர்
பெயர்:ஊட்டத்தூர் சுத்தரத்தினேஸ்வரர் திருக்கோயில்
அமைவிடம்
ஊர்:ஊட்டத்தூர் (சிறுகனூர் அருகே)
மாவட்டம்:திருச்சி
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:சுத்தரத்தினேஸ்வரர்
தாயார்:அகிலாண்டேஸ்வரி
தீர்த்தம்:பிரம்ம தீர்த்தம்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கல்வெட்டுகள்:40க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள்
தொலைபேசி எண்:9788062416, 9786905159 
தேவார வைப்புத் தலப்பாடல் பாடியவர்கள்::அப்பர்
ஊட்டத்தூர் சுத்தரத்தினேஸ்வரர் திருக்கோயில் திருச்சி மாவட்டம், லால்குடி வட்டத்தில் 

ஸ்தல வரலாறு......

ஸ்தல வரலாறு...... 

பழங்கால வரலாற்று சிறப்பு மிக்க ஊட்டத்தூர் சுத்தரத்தினேஸ்வரர் திருக்கோவில் ராஜராஜ சோழ மன்னரால் கட்டப்பட்டது. முற்காலத்தில் ஊற்றத்தூர் என கல்வெட்டில் குறிக்கப்பட்ட இவ்வூர் தற்போது ஊட்டத்தூர் என்று அழைக்கப்படுகிறது. ராஜராஜ சோழ மன்னர் ஊட்டத்தூரின் மேற்கு பகுதியில் சோலேச்சுவரர் என்ற மேட்டுக்கோவில் ஒன்றை எழுப்பினார். வில்வ வனமாக இருந்த அப்பகுதிக்கு ராஜராஜ சோழ மன்னரின் வருகை அவ்வப்போது நிகழ்வது உண்டு. 

காயத்துடன் சிவலிங்கம்.......... ஒருமுறை அவரது வருகையையட்டி மன்னர் செல்லும் வழியில் இடையூறுகளை நீக்க வேண்டி புல் செதுக்கும்   பணி நடைபெற்றது. அந்த தருணத்தில் ஓரிடத்தில் எதிர்பாராது ரத்தம் பீறிட்டெழுந்தது. உடனே பணியாட்கள் மன்னரிடம் செய்தியை தெரிவித்தனர். மன்னர் வந்து பார்த்தபோது ரத்தம் பீறிடுவது நின்று தடைபட்ட தழும்போடு கூடிய ஒரு சிவலிங்கம் காட்சியளித்தது. 

அந்த சிவலிங்கம் காணப்பட்ட இடத்திலேயே கோவில் கட்ட நிர்மாணம் செய்யப்பட்டது. இதன் காரணமாக ராஜராஜ சோழனால் குறிப்பிட்ட இடத்தில் எழுப்பப்பட்டதே ஊட்டத்தூர் அருள்மிகு சுத்தரத்தினேஸ்வரர் திருக்கோவில் ஆகும். இன்றும் லிங்கத்தின் தலைப்பகுதியில் பார்த்தால் மண்வெட்டி பட்ட காயம் தெரியும். கோவில் மூலஸ்தானத்தில் தீபாராதனை நடை பெறும்போது கற்பூர ஜோதி லிங்கத்தில் பிரதிபலிக்கும். இக்காட்சி மூலவர் ஜோதி வடிவானவர் என்றும், சுத்தரத்தினேஸ்வரர் தூயமாமணி என்றும், மாசிலாமணி என்றும் அழைக்கப்படுகிறார். 

தீர்த்தத்தின் சிறப்பு......... 
உலகில் உள்ள அனைத்து தீர்த்தங்களையும் பிரம்மா ஊட்டத்தூருக்கு கொண்டு வந்து பிரம்ம தீர்த்தத்தில் சேர்த்துள்ளார் என்றும், இதனால் இந்த தீர்த்தம் மேலும் சிறப்பு பெற்று உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. ராஜராஜசோழன் உடல் நலம் இல்லாமல் இருந்தபோது, ஊட்டத்தூர் வந்து பிரம்ம தீர்த்தத்தை உடலில் தெளித்து இறைவனை வழிபட்டு குணம் அடைந்து ஆயுட்காலம் நீடிக்கப்பெற்றார் என்றும் கர்ண பரம்பரை கதைகள் மூலம் அறிய முடிகிறது. 

அப்பர் பெருமான் தனது ஆன்மிக சுற்றுப்பயணத்தின் போது ஊட்டத்தூருக்கு செல்ல நினைத்து 5 கிலோ மீட்டர் எல்லையிலேயே திகைத்து மகிழ்ந்து நின்று விட்டார். காரணம், அந்த எல்லையில் இருந்து பார்த்தபோது வழியெல்லாம் சிவலிங்கங்கள் இருப்பதாக உணர்ந்தார். சிவலிங்கத்தின் மீது அவரது பாதங்கள் படுவது சிவ குற்றம் என எண்ணி, எல்லையில் நின்றபடியே ஊட்டத்தூர் பெருமானை நினைத்து பதிகம் பாடியருளினார். இவ்வாறு எல்லையில் இவர் பாடியதால் அந்த இடம் பாடாலூர் என அழைக்கப்பட்டது. 

இந்திரன் மீண்டும் பதவி பெற்ற திருத்தலம்.......... 
ஆசிய கண்டத்திலேயே அபூர்வ நடராஜர் திருக்கோவில் இது. சிறுநீரகம் சம்மந்தமான கோளாறுகளை நீக்கக்கூடியவர். இந்திரன் பதவி இழந்தவுடன் இந்த நடராஜ பெருமானை தரிசித்து மீண்டும் இந்திர பதவியை பெற்றார். பதவியை இழந்தவர்கள் இந்த கோவிலுக்கு வந்து வழிபாடு செய்தால் மீண்டும் இழந்த பதவியை பெறலாம் என்பதை கல்வெட்டு செய்திகள் தெரிவிக்கிறது. 

அந்தக நரிமணம் என்கிற வேர் பல கோடி கற்களில் ஒன்றை பிளக்கும். அப்படி பிளக்கக்கூடிய கற்கள்தான் பஞ்சநதன பாறை. ஆதலால்   இவர் பஞ்சநதன நடராஜர் என்று அழைக்கப்படுகிறார். இவருக்கு என்ன சக்தி என்றால், சூரியன் காலையில் புறப்படும்போது வெளிப்படுத்தும் கதிர்களை ஈர்க்கக்கூடிய சக்தி இங்கு உள்ள நடராஜருக்கு உண்டு. 

ஆதலால் நாம் இவரை என்ன நினைத்து வணங்குகின்றோமோ அது அப்படியே நடக்கிறது. பிரம்மாவுக்கு இந்த ஊரில்தான் சாப விமோசனம் கிடைத்தது. ஆதலால் சிவன் எதிரில் பிரம்ம தீர்த்தம் உள்ளது. வேறு எந்த கோவிலிலும் சிவன் எதிரில் தீர்த்தம் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கதாகும். 

கோவில் அமைப்பு........... ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் 12, 13, 14 ஆகிய மூன்று நாட்களிலும் சூரிய ஒளி கர்ப்பகிரகத்தில் உள்ள லிங்கத்தின் மேல் படுகிறது. இதேபோல் வைகாசி மாதம் விசாக திருவிழாவின்போதும் சூரியனின் கதிர்கள் சுத்தரத்தினேஸ்வரர் மீது 3 நிமிடங்கள் பட்டு வழிபடுகிறது. 

இக்கோவிலில் சுத்தரத்தினேஸ்வரர், அகிலாண்டேசுவரி, பரிவாரங்கள், விநாயகர், சூரியன், தட்சிணாமூர்த்தி, ஐந்து நந்திகேஸ்வரர், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்ரமணியர், 63 நாயன்மார்கள், கோடி விநாயகர், இரட்டை லிங்கம், அதிகார நந்தி, கஜலட்சுமி, லட்சுமி, சரஸ்வதி, கோரப்பல்லுடன் கூடிய துர்க்கை, விஷ்ணு, சண்டிகேஸ்வரர், நடராஜர், சிவகாமசுந்தரி, வீரபத்திரர், பைரவர், நவக்கிரகங்கள் மற்றும் மிக அழகான தோற்றம் உள்ள பல தெய்வங்களின் சிலைகளும் மிக சிறப்பாக அமைந்துள்ளது. 

கிழக்கு நோக்கி நந்தி...........
 மற்ற சிவ தலங்களில் இல்லாத விசேஷமாக இங்கு நந்திதேவர் கிழக்கு முகமாக படுத்து உள்ளார். கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, காவிரி, சிந்து, துங்கப்பத்திரா ஆகிய நதிகளில் யார் பெரியவர்? என்ற தகராறு ஏற்பட்டு இங்கு வந்து சிவபெருமானிடம் முறையிட்டனர்.அவர்களது கோரிக்கையை நிறைவேற்றும்படி சிவ பெருமான் நந்திதேவருக்கு கட்டளையிட்டார். 

அதன்படி நந்திதேவர் 7 நதிகளையும் விழுங்கி விட்டு கிழக்கு நோக்கி படுத்து இருந்ததாகவும் அப்போது கங்கை மட்டும் வெளியே வந்ததாகவும், கர்ண பரம்பரை கதைகள் கூறுகின்றன. இதனால் கோவில் அருகே ஓடும் சிறிய ஆறு நந்தியாறு என்று அழைக்கப்படுகிறது. இவ்வூரின் வடக்கு   பகுதியில் இந்த நந்தியாறு கடலுடன் கலக்கிறது. 

பஞ்சாட்சர மந்திரம்......... இக்கோவிலில் வானளாவிய பெரிய ராஜகோபுரம் உள்ளது. கோவிலின் நடுவில் பிரம்ம தீர்த்தம் உள்ளது. இக்கோவிலில் சுரங்கப்பாதை உள்ளது. இந்த சுரங்கப்பாதை வழியே ஊரில் உள்ள மற்றொரு கோவிலான பெருமாள் கோவிலுக்கு பிரம்ம தீர்த்தம் எடுத்து சென்றதாக வரலாறு கூறுகிறது. நான்கு புறமும் பெரிய மதில் சுவர் உள்ளது. 

இங்கு உள்ள தட்சிணாமூர்த்தி சக்திமிக்க தெய்வங்களில் ஒன்று. மாசி மாதம் வளர்பிறையில் பஞ்சாட்சர மந்திரம் சொல்லி ஜெபம் செய்தால் பல தோஷங்கள் நிவர்த்தி ஆகிறது. சுவாமிக்கு குத்துக்கடலையை மாலையிட்டு குத்துக்கடலை சுண்டல் பூஜையை விடியற்காலை 4.30 மணி முதல் 7 மணிக்குள் குரு ஓரையில் வழிபட வேண்டும். இந்த பூஜையை 11 வாரம் செய்து வந்தால் நினைத்த காரியம் கைகூடும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. 

பாறைகளின் சிறப்பு....... ஆலிங்க நதனம், பஞ்சநதனம், சிங்க நதனம், யானை நதனம், யாழி நதனம் என்று 5 வகையான சிலாக்கற்கள் உள்ளன. இதில் பஞ்சநதனம் என்ற பாறை தெய்வீக ஒளி வீசும் என்பது சிற்பக்கலை வல்லுநரால் கூறப்பட்டுள்ளது. நவரத்தின மோதிரம் அதன் ஒளிகளால் எப்படி நம் கவனத்தை ஈர்க்கிறதோ அதைப்போலத்தான் இந்த பஞ்சநதன   கற்களும் சிறப்பு பெறுகின்றன.

சூரிய பிரகாசத்தை தருகின்ற இந்த பஞ்சநதன பாறைகளால் இவ்வூர் நடராஜர் சிலை வடிவமைக்கப்பட்டு உள்ளது. நடராஜர் சிலைக்கு அருகில் இறைவி சிவகாம சுந்தரியின் திருவுருவ சிலை அமைந்துள்ளது. இறைவி சிவகாம சுந்தரியின் உருவ அமைப்பு வணங்குவதற்கு மட்டுமில்லாமல் ரசனைக்குரியதாகவும் இருப்பது தனிச்சிறப்பாகும். அந்த அன்னை தன் முகத்தை சாய்த்து பஞ்சநதன நடராஜரை பார்ப்பதுபோல் காட்சியளிக்கிறார். 

அபூர்வ நடராஜர்...... 
இந்த கோவிலில் உள்ள துர்க்கை கோரைப்பற்கள் வெளியில் தெரியுமாறு காட்சி அளிக்கிறார். இந்த துர்க்கைக்கும், விஷ்ணு துர்க்கைக்கும் 11 வாரங்கள் எலுமிச்சம்பழ மாலை அணிவித்து நெய்தீபம் ஏற்றி, வடைமாலை சார்த்தி, சர்க்கரைப்பொங்கல் அல்லது பாயாசம் வைத்து வழிபட்டால் திருமணம் ஆகாத பெண்களுக்கு திருமணம் கைகூடும் என்பது ஐதீகம். 

இந்த சிவாலயத்தில் ஒரு தடவை பிரதோஷ வழிபாடு செய்பவர்களுக்கு ஒரு கோடி புண்ணியம் கிடைப்பதாக அகஸ்தியர் பெருமான் தெரிவித்துள்ளார். ஆசிய கண்டத்திலேயே அபூர்வ நடராஜர் திருக்கோவிலான இந்த கோவில் திருச்சியில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் திருச்சிசென்னை தேசிய நெடுஞ்சாலையில் பாடாலூரில் இருந்து புள்ளம்பாடி வழித்தடத்தில் 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்து உள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாடாலூரில் இருந்து அடிக்கடி பஸ் போக்குவரத்து வசதி உள்ளது.

ஊற்றத்தூர் சுத்தரத்தினேஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்


ஆலயத்தின் 5 நிலை கோபுரம்

ஆலயத்தின் 2-வது வாயில்

அழகிய நந்தி

நடராஜர், சிவகாமி

கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி

அம்பாள் சிவகாம சுந்தரி

கால பைரவர்
பிரதோஷ நந்தி



Ganesan Pondicherry
http://suththarathineshwarar.blogspot.in/

ஊற்றத்தூர் வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகம்

ஊற்றத்தூர் வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகம்http://suththarathineshwarar.blogspot.in/

திருநாவுக்கரசரின் 6-ம் திருமுறையில் 70-வது பதிகத்தில் 10-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது. இந்தப் பதிகம் அப்பர் திருப்புகலூரில் தங்கி இருந்த போது அருளிச் செய்ததாகும்.
நறையூரிற் சித்தீச்சரம் நள்ளாறு    6-70-10
நாரையூர் நாகேச்சரம் நல்லூர் நல்ல
துறையூர் சோற்றுத்துறை சூலமங்கை
தோணிபுரம் துருத்தி சோமேச்சரம்
உறையூர் கடலொற்றியூர் ஊற்றத்தூர்
ஓமாம்புலியூர் ஓர் ஏடகத்தும்
கறையூர் கருப்பறியல் கன்றாப்பூரும்
கயிலாயநாதனையே காணலாமே.

பொழிப்புரை :
நறையூரிலுள்ள சித்தீச்சரம், நள்ளாறு, நாரையூர், நாகேச்சரம், நல்லூர், துறையூர், 
சோற்றுத்துறை, சூலமங்கை, தோணிபுரம், துருத்தி, சோமேச்சரம், உறையூர், 
கடலை அடுத்த ஒற்றியூர், ஊற்றத்தூர், ஓமாம்புலியூர், ஏடகம், கறையூர், 
கருப்பறியல், கன்றாப்பூர் ஆகிய இடங்களில் கயிலாய நாதனைக் காணலாம்.
http://suththarathineshwarar.blogspot.in/
திருநாவுக்கரசரின் 6-ம் திருமுறையில் 71-வது பதிகத்தில் 4-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது. இந்தப் பதிகம் அப்பர் திருப்பூந்துருத்தியில் தங்கி இருந்த போது அருளிச் செய்ததாகும்.
பிறை ஊரும் சடைமுடி எம்பெருமான் ஆரூர்    (6-71-4)
பெரும்பற்றப்புலியூரும் பேராவூரும்
நறையூரும் நல்லூரும் நல்லாற்றூரும்
நாலூரும் சேற்றூரும் நாரையூரும்
உறையூரும் ஓத்தூரும் ஊற்றத்தூரும்
அளப்பூர் ஓமாம்புலியூர் ஒற்றியூரும்
துறையூரும் துவையூரும் தோழூர் தானும்
துடையூரும் தொழ இடர்கள் தொடரா அன்றே.

பொழிப்புரை :
பிறை தவழும் சடைமுடிச் சிவபெருமானுடைய ஆரூர், பெரும்பற்றப்புலியூர், பேராவூர், 
நறையூர், நல்லூர், நல்லாற்றூர், நாலூர், சேற்றூர், நாரையூர், உறையூர், ஓத்தூர், 
ஊற்றத்தூர், அளப்பூர், ஓமாம்புலியூர், ஒற்றியூர், துறையூர், துவையூர், தோழூர், 
துடையூர் என்னும் இவற்றைத் தொழத் துன்பங்கள் தொடர மாட்டா.

கோவில் அமைப்பு: நல்ல நிலையில் பராமரிக்கப்பட்டு வரும் வைப்புத் தலக் கோவில்களில் ஊற்றத்தூர் சுத்தரத்தினேஸ்வரர் ஆலயமும் ஒன்றாகும். கிழக்கு நோக்கிய 5 நிலை இராஜகோபுரத்துடன் ஆலயம் அமைந்துள்ளது. அடுத்துள்ள 2-வது நுழைவாயில் மேற்புறம் ரிஷப வாகனத்தில் சிவன், பார்வதி, அருகில் நால்வர், இருபுறமும் விநாயகர், முருகர் ஆகியோர் காட்சி அளிக்கின்றனர். 2-வது நுழைவாயில் கடந்து உள்ளே சென்றால் உருவத்தில் சற்றே பெரியதாக உள்ள நந்தியை தரிசிக்கலாம். கருவறை சுற்றுப் பிராகாரம் வலம் வரும்போது கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தியை தரிசிக்கிலாம், இவர் கல்லால மரத்தின் கீழ், முயலகன் காலடியில் கிடக்க அழகிய சிற்ப வடிவில் காட்சி அளிக்கிறார். மேலும் வலம் வர, இக்கோயிலுக்குரிய விசேஷ மூர்த்தியான நடராசப் பெருமானை சிலா உருவில் தனி சந்நிதியில் அற்புதமாகக் காட்சியளிக்கின்றார். இந்த சிலையைத் லேசாக தட்டிப் பார்த்தால் "ஓம்" என்ற ஓசை எழும்பும். பக்கத்தில் சற்றுப் பார்வையைச் சாய்த்து சுவாமியைப் பார்ப்பது போன்ற அமைப்புடன் சிவகாம சுந்தரி எழுந்தருளியுள்ளாள். இதை அடுத்துள்ள மற்றொரு சந்நிதியில் தனிச் சபையில் நடராசரும், சிவகாமியும் எழுந்தருளியுள்ளனர்.http://suththarathineshwarar.blogspot.in/
கருவறை சுற்றுப் பிராகாரத்தில் வள்ளி தெய்வானை சமேத முருகர் சந்நிதியும் உள்ளது. ஆலயத்தின் தீர்த்தமான பிரம தீர்த்தம் கிணறு வடிவில் ஆலயத்தின் உள்ளே இருக்கிறது. ஆலயத்திலுள்ள காலபைவர் சிலா உருவமும் காணத்தக்கது. காலபைரவருக்கு 11 வாரம் தேய்பிறை அஷ்டமியில் சகஸ்ரநாம அர்ச்சனை செய்தால் குழந்தைகளுக்கு மனபயம் நீங்கும், மாடுகளுக்கு ஏற்படும் வியாதிகளுக்கு நிவாரணம் கிடைக்கும். மேலும் கொத்துக்கடலை மாலை இறைவனுக்குச் சார்த்தி, விடியற்காலை குரு ஹோரையில் பூஜை செய்தால் காரியசித்தி கிடைக்கும்.
Ganesan Pondicherry
http://suththarathineshwarar.blogspot.in/

தகவல் பலகை

சுத்தரத்னேஸ்வரர் திருக்கோவில், ஊற்றத்தூர்


தகவல் பலகைhttp://suththarathineshwarar.blogspot.in/ Ganesan Pondicherry
சிவஸ்தலம் பெயர்ஊற்றத்தூர் (இன்றைய நாளில் ஊட்டத்தூர் என்று பெயர்)
இறைவன் பெயர்சுத்தரத்தினேஸ்வரர்
இறைவி பெயர்அகிலாண்டேஸ்வரி
பதிகம்அப்பர் (6-70-10, 6-71-4)
எப்படிப் போவதுதிருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுகனூர் தாண்டி பாடாலூர் வந்து, அங்கிருந்து பிரியும் புள்ளம்பாடி சாலையில் 5 கி.மீ. சென்ற பிறகு சாலை இரண்டாகப் பிரியும் இடத்தில் வலதுபுறம் செல்லும் சாலையில் சென்று ஊட்டத்தூர் தலத்தை அடையலாம். ஊட்டத்தூர் செல்ல திருச்சியில் இருந்து நகரப் பேருந்து வசதி உண்டு
ஆலய முகவரிஅருள்மிகு சுத்தரத்னேஸ்வரர் திருக்கோவில்
ஊட்டத்தூர்
ஊட்டத்தூர் அஞ்சல்
வழி பாடாலூர்
லால்குடி வட்டம்
திருச்சி மாவட்டம்
PIN - 621109

இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

ஆலய தொடர்புக்கு: ராமநாத குருக்கள், நடராஜ குருக்கள் - தொலைபேசி: 04328 - 267126, கைபேசி: 97880 62416

Ganesan Pondicherry_http://suththarathineshwarar.blogspot.in/

ஊட்டத்தூர் சுத்தரத்தினேஸ்வரர் திருக்கோயில் திருச்சி மாவட்டம்

ஊட்டத்தூர் சுத்தரத்தினேஸ்வரர் திருக்கோயில் திருச்சி மாவட்டம், லால்குடி வட்டத்தில் அமைந்துள்ள தொன்மையான சிவபெருமான் திருக்கோயில்.ராஜராஜசோழ மன்னரால் கட்டப்பட்ட பழைமையான தேவார வைப்புத் தலம். சோழ மன்னர்கள், விஜய நகர, பாண்டிய மன்னர்களாலும் திருப்பணிகள் செய்யப்பட்ட திருக்கோயில்.
இத்திருக்கோயில் பற்றி அப்பர் திருப்பாடல்கள், க்ஷேத்திரக்கோவை-திருத்தாண்டகம் பாடல்கள் குறிப்பிடுகின்றன

தலவரலாறு

ஊட்டத்தூரின் மேற்கே உள்ள சோளேஸ்வரம் எனும் கோயிலை அமைத்த ராஜராஜ சோழன் அடிக்கடி அப்பகுதிக்கு வருவது வழக்கமாக இருந்த சமயம் ஒருமுறை மன்னர் வருகைக்காகப் பாதையைச் சரிசெய்யும் பணியில் மண்வெட்டியால் புல் செதுக்கும் பொழுது ஓரிடத்தில் இரத்தம் வரவே, இச்செய்தி மன்னரிடம் தெரிவிக்கப்பட்டது. மன்னர் வந்து சோதித்து சிவலிங்கத்தைக் கண்டு, மன்னிக்க வேண்டி அவருக்கு திருக்கோயில் எழுப்பினார். மூலவர் சிவலிங்கத்தின் தலைப்பகுதியில் மண்வெட்டி வடு உள்ளது.


ராஜகோபுரம்

ஏழுநிலை கொண்ட ராஜகோபுரம் உள்ளது.

தேவார வைப்புத் தலம்

அப்பர் பெருமான் பாடலூரிலிருந்து ஊட்டத்தூர் சிவபெருமானைப் பாடியுள்ளார்.

பஞ்சநதனக்கல்

பஞ்சநதனக்கல் எனும் அரிய வகைக் கல்லில் செய்யப்பட்ட எட்டு அடி உயர நடராஜப்பெருமான் சிலை வழிபாட்டில் உள்ளது.

சிறப்பு

கட்டடக்கலை சிறப்பு

வருடந்தோறும் தமிழ் மாசி மாதம் 12,13,14 ஆம் தேதிகளில் சூரியனின் ஒளிக்கதிர்கள் சிவபெருமான் மீது விழுமாறு அமைக்கப்பட்டுள்ளது.

நோய்தீர்க்கும் தீர்த்தம்

பஞ்சநதனக்கல்லுக்கு மருத்துவச் சிறப்புகள் உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. பஞ்சநதனக்கல் நடராஜருக்கு வெட்டிவேர் மாலையிட்டுப் பின்னர் அம்மாலையைப் பிரம்ம தீர்த்தத்தில் போட்டு அந்த தீர்த்தத்தைப் பருக சிறுநீரகக்கோளாறுகள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

முள் படுகளம்

வருடந்தோறும் முள் படுகளம் எனும் இருபதுக்கும் மேலான கிராம மக்கள் பங்கு பெறும் திருவிழா இத்திருத்தலத்தில் நடைபெறுகின்றது.

திருட்டு

லால்குடி, நவ 19: திருச்சி மாவட்டம், லால்குடி அருகேயுள்ள ஊட்டத்தூர் அருள்மிகு சுத்தரத்தினேசுவரர் கோயிலின் கதவு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த 3 வெண்கலச் சிலைகள் திருடப்பட்டன. மேலும், கோயில் உண்டியலும் உடைக்கப்பட்டுள்ளது.
 லால்குடி அருகேயுள்ள புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த ஊட்டத்தூர் ஊராட்சியில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட- மிகவும் பழைமை வாய்ந்த அருள்மிகு சுத்தரத்தினேசுவரர் கோயில் உள்ளது. சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தக் கோயிலின் சுற்றுச்சுவர் சுமார் 50 அடி உயரம் கொண்டது.
 ஒவ்வோர் ஆண்டும் மே மாதம் "முள் படுகளம்' திருவிழா இங்கு விமரிசையாக நடைபெறும். இந்த விழாவில் சுற்றுப்பகுதியிலுள்ள 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்பார்கள். இத்தகைய பிரசித்திப் பெற்ற கோயிலின் அர்ச்சகர்கள், இதே கிராமத்தைச் சேர்ந்த ராமநாதன் (65), இவரது மகன் நடராஜன் (45) இருவரும் சனிக்கிழமை காலை 7 மணிக்கு வழக்கம்போல கோயிலைத் திறந்து உள்ளே சென்றனர். உள்பிரகார கதவு உடைக்கப்பட்டிருந்ததைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்து மேலும் உள்ளே சென்று பார்த்தனர். கோயிலின் மையப் பகுதியிலிருந்த உண்டியல் உடைக்கப்பட்டு சில்லறைகள் சிதறிக் கிடந்தன. கருவறையின் பின்புறம் இருந்த அம்பாளுடன் இணைந்த ஸ்கந்தர், சண்டிகேசுவர், விநாயகர் ஆகிய 3 வெண்கலச் சிலைகள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இவை ஒவ்வொன்றும் ஏறத்தாழ இரண்டரை அடி உயரம் கொண்டவை.
 இதையடுத்து உள்ளூர் பிரமுகர்களுக்கும், இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து சிறுகனூர் போலீஸôர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் ஜாக் வரவழைக்கப்பட்டது. விரல் ரேகை நிபுணர்களும் ஆய்வு செய்தனர்.
 16 நாள்களில்...
 புள்ளம்பாடியில் உள்ள அருள்மிகு வரதராஜ பெருமாள் கோயிலில் உள்ள 3 சிலைகள் கடந்த 3-ம் தேதி திருடு போனது. தற்போது 16 நாள்களில் இந்தத் திருட்டு நிகழ்ந்துள்ளது. இதே கோயிலில் 2002-ம் ஆண்டில் திருடுபோய், மீட்கப்பட்ட சிலை ஒன்று நீதிமன்றத்தில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
                                                                       Ganesan Pondicherry
                                                                              http://suththarathineshwarar.blogspot.in/